பதிவு செய்த நாள்
18 ஆக2014
01:12
புதுடில்லி:நடப்பாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், இண்டர்நெட் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 5.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 25.16 கோடியாக அதிகரித்துள்ளது என, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பார்லிமென்டில் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:கடந்த ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, இண்டர்நெட் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 23.87 கோடியாக இருந்தது. இது, மதிப்பீட்டு காலாண்டில், 25.16 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. இதில், அகண்ட அலைவரிசை சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 6.09 கோடியாக உள்ளது.மகாராஷ்டிராவில் மும்பை மற்றும் கோவா உட்பட) அதிகபட்சமாக, 4.02 கோடி இண்டர்நெட் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இதையடுத்து, உத்தரபிரதேசத்தில் இந்த எண்ணிக்கை, (உத்தரகண்ட் உட்பட), 2.43 கோடியாகவும், தமிழகத்தில், 2.04 கோடியாகவும், ஆந்திராவில் (தெலுங்கான உட்பட) 1.76 கோடியாகவும் உள்ளன.இமாச்சல பிரதேசத்தில், குறைந்தபட்சமாக, 20 லட்சம் வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ளனர்.தேசிய தொலைத்தொடர்பு கொள்கை – 2012ன் படி, வரும் 2017 மற்றும் 2020ம் ஆண்டிற்குள், அகண்ட அலைவரிசை சேவை இணைப்புகளின் எண்ணிக்கையை, முறையே, 17.50 கோடி மற்றும் 60 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, பிரசாத் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|