பதிவு செய்த நாள்
20 செப்2014
00:11
பழநி:விளைச்சல் அதிகரிப்பால், அவரைக்காய் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால், விவசாயி கள் கவலை அடைந்துள்ளனர்.பழநி, கணக்கன்பட்டி, புளியம்பட்டி, காவலபட்டி, கொடை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கத்தரி, தக்காளி, முருங்கைக்காய், அவரை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன.போதிய மழை இல்லாத போதும் சொட்டுநீர் பாசனமுறையில், குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படும் தக்காளி, அவரையை ஏராளமான விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். இதில், அவரை விளைச்சல் மட்டும் அமோகமாக உள்ளது.சில வாரங்களுக்கு முன், மார்க்கெட்டில் கிலோ, 60–70 ரூபாய்க்கு விற்கப்பட்ட அவரை, தற்போது, 16–20 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால், விளைச்சல் அதிகரித்துள்ள போதிலும், எதிர்பார்த்த விலை கிடைக்காததால்,விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|