பதிவு செய்த நாள்
28 செப்2014
01:08
மும்பை:இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 10 கோடி டாலர் (600 கோடி ரூபாய்) குறைந்து, 31,559 கோடி டாலராக (18.93 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, கடந்த 12ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 161 கோடி டாலர் குறைந்து, 31,569 கோடி டாலராக இருந்தது.
அமெரிக்க டாலர் தவிர்த்த இதர நாட்டு செலாவணிகளின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ள நிலையிலும், அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஆக, தொடர்ந்து மூன்று வாரங்களாக, அன்னியச் செலாவணி கையிருப்பு சரிவடைந்து வருகிறது.கணக்கீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 2 கோடி டாலர் உயர்ந்து, 28,878 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் மாற்றம் எதுவுமின்றி, 2,093 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.
மதிப்பீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 84 லட்சம் டாலர் குறைந்து, 432 கோடி டாலராகவும், சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் கையிருப்பு, 11 கோடி டாலர் சரிவடைந்து, 155 கோடி டாலராகவும் வீழ்ச்சி கண்டுள்ளன என, ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|