பதிவு செய்த நாள்
07 அக்2014
05:10
புதுடில்லி:கடந்த ஆகஸ்டில், உலக காபி ஏற்றுமதி, 1.22 சதவீதம் சரிவடைந்து, 88.40 லட்சம் மூட்டைகளாக (ஒரு மூட்டை=60 கிலோ) வீழ்ச்சி கண்டுள்ளது.இதற்கு, இந்தோனேஷியா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளின் ஏற்றுமதி குறைந்ததே முக்கிய காரணம் என, சர்வதேச காபி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கடந்தாண்டின் இதே மாதத்தில், சர்வதேச அளவில் காபி ஏற்றுமதி, 89.50 லட்சம் லட்சம் மூட்டைகளாக அதிகரித்து காணப்பட்டன.மதிப்பீட்டு மாதத்தில், கொலம்பியா நாட்டின் காபி ஏற்றுமதி, 8.80 லட்சம் மூட்டைகளாக சரிவடைந்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட்டில், இதன் ஏற்றுமதி, 9.30 லட்சம் மூட்டைகளாக உயர்ந்திருந்தது.
இதே போன்று, இந்தோனேஷியாவின் காபி ஏற்றுமதியும், 9.50 லட்சம் மூட்டையிலிருந்து, 5.50 லட்சம் மூட்டைகளாக வீழ்ச்சி கண்டுள்ளது.மேலும், இந்தியாவின் காபி ஏற்றுமதியும், கணக்கீட்டு மாதத்தில், 3.90 லட்சம் மூட்டைகளிலிருந்து, 2.90 லட்சம் மூட்டைகளாக குறைந்துள்ளது.அதேசமயம், உலகளவில் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் பிரேசிலின் காபி ஏற்றுமதி, 26.5 லட்சம் மூட்டைகளிலிருந்து, 30.10 லட்சம் மூட்டைகளாக அதிகரித்துள்ளது.இதே போன்று, வியட்நாமின் காபி ஏற்றுமதியும், 12 லட்சம் மூட்டைகளிலிருந்து, 17.20 லட்சம் மூட்டைகளாக உயர்ந்துள்ளது.
மேலும், எத்தியோப்பியாவின் காபி ஏற்றுமதியும், கணக்கீட்டு மாதத்தில், 2.70 லட்சம் மூட்டைகளிலிருந்து, 3.40 லட்சம் மூட்டைகளாக வளர்ச்சி கண்டுள்ளது.2013–14ம் சந்தைப் பருவத்தில் அக்டோபர் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், சர்வதேச நாடுகளின் ஒட்டு மொத்த காபி ஏற்றுமதி, 1.01 கோடி மூட்டைகள் என்ற அளவில் உள்ளது. இது, கடந்த பருவத்தின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியுடன் (1.03 கோடி மூட்டைகள்) ஒப்பிடுகையில், சற்றே குறைவாகும் என, சர்வதேச காபி கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|