பதிவு செய்த நாள்
11 அக்2014
01:21
மும்பை,:பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள், சென்ற செப்டம்பரில், கடன்பத்திர ஒதுக்கீடுகள் மூலம், 58,578 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன.
இது, முன் எப்போதும் காணப்படாத அதிகபட்ச தொகையாகும் என, ‘செபி தெரிவித்துள்ளது.மொத்தம், 312 ஒதுக்கீடு கள் மூலம், மேற்கொண்ட தொகை திரட்டப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 174 வெளியீடுகளில், 32,875 கோடி ரூபாய் திரட்டி கொள்ளப்பட்டது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், இவ்வகை வெளியீடுகள் மூலம் நிறுவனங்கள் திரட்டிய தொகை, 1.45 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடு என்பது, நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான மூலதனத்தை அதிகரித்து கொள்ள, நிறுவன முதலீட்டாளர்களுக்கு, கடன்பத்திரங்களை ஒதுக்கீடு செய்து நிதி திரட்டி கொள்வதாகும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|