பதிவு செய்த நாள்
20 அக்2014
10:09
மும்பை : வாரத்தின் துவக்கநாளில் இந்திய பங்குசந்தைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. சென்செக்ஸ் 390 புள்ளிகளும், நிப்டி 103 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருந்தன. எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதாலும், மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., ஆட்சி அமைக்க இருப்பதன் எதிரொலியாகவும் இந்திய பங்குசந்தைகள் உயர்ந்துள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 392.51 புள்ளிகள் உயர்ந்து 26,501.04-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 103.70 புள்ளிகள் உயர்ந்து 7,883.40-ஆகவும் இருந்தன.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான, ஜப்பானின் நிக்கி 3.34 சதவீதமும், ஹாங்காங்கின ஹேங்சேங் 0.94 சதவீதமும் உயர்ந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|