வரத்து இன்றி உயர்ந்­தது பாசிப்­ப­ருப்புவரத்து இன்றி உயர்ந்­தது பாசிப்­ப­ருப்பு ... 6 மாநி­லங்­களில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி மேலாளர் தகவல் 6 மாநி­லங்­களில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி மேலாளர் தகவல் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு மார்க்கெட்டில் முதலீடு: நோக்கம், குறிக்கோள் தேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2014
00:58

சிவகங்கை:“பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு முன், முதலீடு செய்வதின் நோக்கம், குறிக்கோளை தேர்வு செய்த பின் முதலீடு செய்ய வேண்டும்,” என, 'செபி' உதவி பொது மேலாளர் ஏ.விஜயன் பேசினார்.சிவகங்கையில் 'செபி', என்.எஸ்.டி.எல்., சார்பில் பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. என்.எஸ்.டி.எல்., உதவி துணை தலைவர் பந்தம் ஸ்ரீனிவாஸ் வரவேற்றார். ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா துணை மேலாளர் பிரதீப், எச்.டி.எப்.சி., அசெட் மேனேஜ்மென்ட் கிளை மேலாளர் பி.சுரேஷ்பாண்டியன் தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். என்.எஸ்.டி.எல்., உதவி மேலாளர் வைபவ்நார்கர் தொகுத்து வழங்கினார்.
'செபி' உதவி பொது மேலாளர் ஏ.விஜயன் பேசுகையில், பங்கு முதலீடுகளை பெறும் பொது, தனியார் நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தி முறைப்படுத்தும் பணிகளை 'செபி' நிறுவனம் செய்து வருகிறது. ஒவ்வொருவரும் பங்கு மார்க்கெட்களில் முதலீடு செய்வதற்கு முன், அதற்கான திட்டம், நோக்கம், குறிக்கோள்களை அறிந்து கொண்டு முதலீடு செய்யவேண்டும். கடன் வாங்கி முதலீடு செய்வதை தவிர்க்கவும். ஒவ்வொரு கம்பெனியை பற்றி நன்கு அறிந்த பின், பங்குகளை முதலீடு செய்யவேண்டும். பங்கு விற்றவை, வாங்கியவை குறித்து அவ்வப்போது அறிந்து கொள்ள வேண்டும். முதலீடு செய்வதின் அவசியம், முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வழங்கும் நோக்கில், சென்னை, கோயம்புத்துார், மதுரை போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமின்றி சிவகங்கை போன்ற வளர்ந்து வரும் நகரங்களில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்துகிறோம், என்றார். கருத்தரங்கில் ஏராளமான பங்கு முதலீட்டாளர்கள், புதிதாக பங்கு சந்தையில் இணைய விரும்பி வந்தவர்கள் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)