பதிவு செய்த நாள்
02 நவ2014
00:58
சிவகங்கை:“பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு முன், முதலீடு செய்வதின் நோக்கம், குறிக்கோளை தேர்வு செய்த பின் முதலீடு செய்ய வேண்டும்,” என, 'செபி' உதவி பொது மேலாளர் ஏ.விஜயன் பேசினார்.சிவகங்கையில் 'செபி', என்.எஸ்.டி.எல்., சார்பில் பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. என்.எஸ்.டி.எல்., உதவி துணை தலைவர் பந்தம் ஸ்ரீனிவாஸ் வரவேற்றார். ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா துணை மேலாளர் பிரதீப், எச்.டி.எப்.சி., அசெட் மேனேஜ்மென்ட் கிளை மேலாளர் பி.சுரேஷ்பாண்டியன் தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். என்.எஸ்.டி.எல்., உதவி மேலாளர் வைபவ்நார்கர் தொகுத்து வழங்கினார்.
'செபி' உதவி பொது மேலாளர் ஏ.விஜயன் பேசுகையில், பங்கு முதலீடுகளை பெறும் பொது, தனியார் நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தி முறைப்படுத்தும் பணிகளை 'செபி' நிறுவனம் செய்து வருகிறது. ஒவ்வொருவரும் பங்கு மார்க்கெட்களில் முதலீடு செய்வதற்கு முன், அதற்கான திட்டம், நோக்கம், குறிக்கோள்களை அறிந்து கொண்டு முதலீடு செய்யவேண்டும். கடன் வாங்கி முதலீடு செய்வதை தவிர்க்கவும். ஒவ்வொரு கம்பெனியை பற்றி நன்கு அறிந்த பின், பங்குகளை முதலீடு செய்யவேண்டும். பங்கு விற்றவை, வாங்கியவை குறித்து அவ்வப்போது அறிந்து கொள்ள வேண்டும். முதலீடு செய்வதின் அவசியம், முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வழங்கும் நோக்கில், சென்னை, கோயம்புத்துார், மதுரை போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமின்றி சிவகங்கை போன்ற வளர்ந்து வரும் நகரங்களில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்துகிறோம், என்றார். கருத்தரங்கில் ஏராளமான பங்கு முதலீட்டாளர்கள், புதிதாக பங்கு சந்தையில் இணைய விரும்பி வந்தவர்கள் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|