வரத்து இன்றி உயர்ந்­தது பாசிப்­ப­ருப்புவரத்து இன்றி உயர்ந்­தது பாசிப்­ப­ருப்பு ...  வர்த்தக சிலிண்டர் விலை ரூ.17 சரிவு வர்த்தக சிலிண்டர் விலை ரூ.17 சரிவு ...
6 மாநி­லங்­களில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி மேலாளர் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2014
00:59

சின்­ன­மனுார்:‘‘கள்ள ரூபாய் நோட்­டுகள் புழக்­கத்தை தடுக்க அடுத்த ஆண்டு இறு­திக்குள் இந்­தி­யாவில் ஆறு மாநி­லங்­களில் பிளாஸ்டிக் நோட்­டுக்கள் வெளி­யி­டப்­பட உள்­ளன,’’ என சென்னை ரிசர்வ் வங்­கியின் உதவிப் பொது மேலாளர் பேசினார்.தேனி ‘நபார்டு’ வங்கி, சின்­ன­மனுார் சோசியல் மாஸ் சர்வீஸ் டிரஸ்ட் இணைந்து நடத்­திய பெண்­க­ளுக்­கான தொழில் பயிற்சி துவக்க விழா சின்­ன­ம­னுாரில் நடந்­தது. நிறு­வன இயக்­குனர் வசந்தா வர­வேற்றார். ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ராஜ்­குமார் பேசி­ய­தா­வது: கிரா­மப்­பெண்­க­ளுக்கு மத்­திய, மாநில அர­சுகள் ஏரா­ள­மான பயிற்­சிகள் அளிக்­கின்­றன.
ஒவ்­வொரு பெண்ணின் சேமிப்பும் நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு உறு­து­ணை­யாக இருக்­கி­றது. எனவே பெண்கள் கண்­டிப்­பாக சேமிக்கும் பழக்­கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ரூபாய் நோட்­டுக்கள் இந்­தி­யாவில் நாசிக், தேவாஸ், மைசூர், சல்­போனி ஆகிய நக­ரங்­களில் மட்­டுமே அச்­சா­கின்­றன.தற்­போ­தைய ரூபாய் நோட்டின் ஆயுட்­காலம் 6 ஆண்­டுகள் மட்­டுமே. இதனால் அடுத்­த­டுத்து புதிய ரூபாய் நோட்­டுக்கள் அச்­ச­டிக்க வேண்டி உள்­ளது. கள்ள நோட்­டுக்கள் புழக்­கத்­திற்கு வரு­வதை தடுப்­ப­தற்­காக அதிக தொழில்­நுட்­பத்தில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்­டுக்கள் முதல் கட்­ட­மாக ஆறு மாநி­லங்­களில் வௌியி­டப்­பட உள்­ளன. ரூபாய் நோட்­டுக்­களில் எழு­து­வது, கிழிப்­பது தேசிய குற்றம்.இவ்­வாறு பேசினார்.‘நபார்டு’ வங்கி மேலாளர் வெங்­கட்­ர­மணா, கனரா வங்கி ஆலோ­சகர் ராமச்­சந்­திரன், தன்­னார்வ நிறு­வன நிர்­வாகி பவுன் பங்­கேற்­றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)