பதிவு செய்த நாள்
02 நவ2014
00:59
சின்னமனுார்:‘‘கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை தடுக்க அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் ஆறு மாநிலங்களில் பிளாஸ்டிக் நோட்டுக்கள் வெளியிடப்பட உள்ளன,’’ என சென்னை ரிசர்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளர் பேசினார்.தேனி ‘நபார்டு’ வங்கி, சின்னமனுார் சோசியல் மாஸ் சர்வீஸ் டிரஸ்ட் இணைந்து நடத்திய பெண்களுக்கான தொழில் பயிற்சி துவக்க விழா சின்னமனுாரில் நடந்தது. நிறுவன இயக்குனர் வசந்தா வரவேற்றார். ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ராஜ்குமார் பேசியதாவது: கிராமப்பெண்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏராளமான பயிற்சிகள் அளிக்கின்றன.
ஒவ்வொரு பெண்ணின் சேமிப்பும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. எனவே பெண்கள் கண்டிப்பாக சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ரூபாய் நோட்டுக்கள் இந்தியாவில் நாசிக், தேவாஸ், மைசூர், சல்போனி ஆகிய நகரங்களில் மட்டுமே அச்சாகின்றன.தற்போதைய ரூபாய் நோட்டின் ஆயுட்காலம் 6 ஆண்டுகள் மட்டுமே. இதனால் அடுத்தடுத்து புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க வேண்டி உள்ளது. கள்ள நோட்டுக்கள் புழக்கத்திற்கு வருவதை தடுப்பதற்காக அதிக தொழில்நுட்பத்தில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் முதல் கட்டமாக ஆறு மாநிலங்களில் வௌியிடப்பட உள்ளன. ரூபாய் நோட்டுக்களில் எழுதுவது, கிழிப்பது தேசிய குற்றம்.இவ்வாறு பேசினார்.‘நபார்டு’ வங்கி மேலாளர் வெங்கட்ரமணா, கனரா வங்கி ஆலோசகர் ராமச்சந்திரன், தன்னார்வ நிறுவன நிர்வாகி பவுன் பங்கேற்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|