பதிவு செய்த நாள்
11 நவ2014
05:08
குன்னுார் :ஏல மையங்களில் தேயிலை துாள் தொடர்ந்து தேக்கமடைந்து வருவதால், விலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை ஏல மையத்தில், நடப்பாண்டுக்கான, 45வது ஏலம் நடந்தது.இதில், மொத்தம் 17.37 லட்சம் கிலோ தேயிலை துாள், விற்பனைக்கு வந்தது. இந்த ஏலத்தில், வெளிநாட்டு வர்த்தகர்களின் பங்களிப்பு குறைவாக இருந்த போதும், உள்நாட்டு வர்த்தகர்கள் அதிகளவில் பங்கேற்றனர்.இருப்பினும், 35 சதவீத தேயிலை துாள், விற்பனையாகாமல் தேக்கமடைந்தது. இந்த வாரம், இலை ரகம்(சாதா) கிலோ, 41 ரூபாய் முதல், 46 வரையும், உயர் ரகம், 96 ரூபாய் முதல், 120 வரையும், டஸ்ட் ரகம்(சாதா), 47 ரூபாய் முதல், 49 வரையிலும், உயர் ரகம், 120 ரூபாய் முதல், 175 வரையும் விற்கப்பட்டது.அதிகபட்சமாக ஆர்த்தோடக்ஸ் ரகத்துக்கு, 212 ரூபாய் விலை கிடைத்தது. கடந்த சில வாரங்களாகவே, தேயிலை துாள் தொடர்ந்து தேக்கமடைந்து வருவதால் உற்பத்தியாளர்களும், போதிய விலை கிடைக்காமல் விவசாயிகளும், கவலை அடைந்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|