பதிவு செய்த நாள்
06 அக்2015
12:04
‘போர்டு இந்தியா’ நிறுவனம், கடந்த மாதத்தில், 22 ஆயிரத்து, 428 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் நடந்த விற்பனையான, 13 ஆயிரத்து, 742-ஐ காட்டிலும் இது அதிகம். செப்டம்பரில், இந்தியாவில், 8,274 கார்களை விற்பனை செய்த போர்டு, 14 ஆயிரத்து, 154 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இதுபற்றி, போர்டு இந்தியா விற்பனை பிரிவு, நிர்வாக இயக்குனர் அனுராக் மெரோத்ரா கூறும்போது, ‘‘செப்டம்பரில், 4.29 லட்சம் ரூபாய் துவக்க விலையில் அறிமுகமான, மேம்படுத்தப்பட்ட, ‘பிகோ’ கார், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் மூலம், அடுத்த ஆண்டின், முதல் காலாண்டுக்குள், மூன்று புதிய கார்களை அறிமுகப்படுத்தும், எங்கள் இலக்கை வெற்றிகரமாக நெருங்கி விட்டோம்,’’ என, தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், உதகையிலும், விற்பனையகத்தை, போர்டு திறந்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|