பதிவு செய்த நாள்
22 பிப்2016
07:26
புதுடில்லி : இந்தியாவின் முக்கிய நகரங்களில், ‘மரியாட் இண்டர்நேஷனல்’ நிறுவனம், ‘ஏசி’ ஓட்டல்களை துவக்க திட்டமிட்டுள்ளது. கடந்த, 2011ல், மரியாட் இண்டர்நேஷனல் நிறுவனம், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ‘ஏசி’ ஓட்டல் நிறுவனத்துடன் இணைந்து, ‘ஏசி’ ஓட்டல் என்ற பெயரில், நவீன வசதிகளுடன் கூடிய நட்சத்திர ஓட்டல்களை அமைத்தது. தற்போது, இந்நிறுவனங்களுக்கு, ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல், பிரான்ஸ் நாடுகளில், 9,000 அறைகளுடன் கூடிய, 79 நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. தற்போது, இந்நிறுவனங்கள், இந்தியாவில் ஓட்டல் துவங்க திட்டமிட்டுள்ளன. இதுகுறித்து, மரியாட் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தெற்கு ஆசியாவின் துணை தலைவர் நீரஜ் கோவில் கூறுகையில், ‘‘இந்தியாவில், நடப்பாண்டில், ‘ஏசி’ ஓட்டல்கள் துவங்கப்படும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|