பதிவு செய்த நாள்
23 பிப்2016
00:52
* 16 சதவீத வளர்ச்சியை, 2016 – 17ல் அடைய விருப்பப்படுவதாக, இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.*100 ஸ்மார்ட் கிராமங்களை, 2016 இறுதிக்குள் உருவாக்குவது என்ற இலக்கை வைத்திருக்கிறார், பிரதமர் மோடி.* 421 மில்லியன் யூனிட் மின்சாரத்தை, நான்கு மாவட்டங்களில் எல்.இ.டி., பல்புகளைப் பயன்படுத்தியதால் மிச்சப்படுத்தி இருக்கிறது ஆந்திர மாநிலம்.* 5,537 கிராமங்களில் மின் வசதியை, இந்த நிதியாண்டில் இதுவரை ஏற்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.* 1,000 கோடி ரூபாய் நிறுவனமாக, வரும் 2020க்குள் மாறும் என்கிறது, காளிமார்க் நிறுவனம்.12,000 மில்லியன் கிலோ தேயிலையை, 2014 – 15ல் உற்பத்தி செய்திருக்கிறது இந்தியா.* 400 இ.காமர்ஸ் நிறுவனங்களுடன், கடந்த இரு ஆண்டுகளில், இந்திய தபால் துறை பொருட்களை வினியோகிக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|