பதிவு செய்த நாள்
23 பிப்2016
03:12
புதுடில்லி : சீனாவில் உள்ள, ஷாங்காயில் நடக்கும், ‘ஜி – 20’ நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பங்கேற்கமாட்டார் என, தகவல் வெளியாகி உள்ளது. உலகில், 20 வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பு, ஜி – 20. இந்த கூட்டமைப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய தலைமை வங்கி அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு, சீனாவில் உள்ள ஷாங்காயில், பிப்., 26, 27ம் தேதிகளில் நடக்கிறது. பார்லிமென்டில், மத்திய பட்ஜெட், பிப்., 29ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக, பார்லி., கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. இதில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பங்கேற்க உள்ளார். இதனால், ஜி – 20 மாநாட்டில் அவர், பங்கேற்க வாய்ப்பில்லை என, தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாநாட்டில், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்க உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|