பதிவு செய்த நாள்
24 பிப்2016
00:43
புதுடில்லி : உள்நாட்டில், கூடுதலாக, 15 உருக்கு பொருட்களுக்கு, ஐ.எஸ்.ஐ., தரச் சான்று அவசியம் என, மத்திய உருக்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு, உருக்கு தொழிற்சாலைகளின் தரத்தை மேம்படுத்தவும், தரமான உருக்கு பொருட்களை விற்கவும், பல நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, 15 உருக்கு பொருட்கள் விற்பனைக்கு, ஐ.எஸ்.ஐ., என்ற இந்திய தர நிர்ணய சான்று அவசியம் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, மார்ச், 18ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து, இந்திய தரச் சான்றிதழ் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘உருக்கு பொருட்கள் உற்பத்தியாளர், வினியோகஸ்தர், விற்பனையாளர் என அனைவரும், ‘மைல்டு ஸ்டீல்’ உட்பட, 15 உருக்கு பொருட்களை, ஐ.எஸ்.ஐ., தரச் சான்று இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|