பதிவு செய்த நாள்
28 பிப்2016
06:20
மும்பை : நாட்டின் மிகப் பெரிய பொது துறை வங்கியான, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின், ஆண்டு பொதுக் கூட்டம், மும்பையில் நடைபெற்றது. இதில், வங்கி, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பங்கு வெளியீடு மேற்கொண்டு, 15 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டுவதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ‘இந்த தீர்மானத்திற்கு, பெரும்பான்மையான பங்கு முதலீட்டாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அனுமதிக்குப் பின், பங்கு வெளியீட்டிற்கான பணிகள் துவங்கும்’ என, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இவ்வங்கி, பங்கு வெளியீடு மூலம், வரும், 2017, மார்ச் மாதத்துக்குள், 15 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளதாக, கடந்த மாதம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பங்கு வெளியீடு, நடப்பாண்டிலேயே மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக, இவ்வங்கி அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|