பதிவு செய்த நாள்
01 மார்2016
07:26
மும்பை : சுற்றுலா மற்றும் ஓட்டல் குறித்து, பட்ஜெட்டில் எதுவும் இடம்பெறாதது, இத்துறையினருக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தற்போது, ஓட்டல் துறையில், 20 சதவீத அளவிற்கு பலமுனை வரிவிதிப்பு உள்ளது. இதற்கு தீர்வாக, வரும் நிதியாண்டில், சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வரும் என, ஓட்டல் துறை எதிர்பார்த்தது. ஆனால், அதுகுறித்து, பட்ஜெட்டில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.‘இ – டூரிஸ்ட்’ விசா காலம் நீட்டிப்பு, சுற்றுலா மற்றும் மருத்துவ சுற்றுலா துறை மேம்பாடு, ஓட்டல்கள், அடிப்படை கட்டமைப்பு அந்தஸ்தை பெறுவதற்கான முதலீட்டு வரம்பை, 25 கோடி ரூபாயாக குறைப்பது உள்ளிட்ட, பல கோரிக்கைகளுக்கு, பட்ஜெட் பதிலளிக்கவில்லை.
இதுகுறித்து, இந்திய ஓட்டல் மற்றும் ரெஸ்டாெரன்ட் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் கமலேஷ் பரோத் கூறியதாவது: பா.ஜ., ஆட்சி அமைத்த போது, பிரதமர் மோடி, ‘புதிய அரசின் நான்கு துாண்களில், சுற்றுலா துறையும் ஒன்று’ என்றார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியோ, பட்ஜெட் உரையில், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும், ஒன்பது துாண்கள் குறித்து பேசினார். ஆனால், முக்கிய துாணாக உள்ள, சுற்றுலா மற்றும் ஓட்டல் துறையை மறந்துவிட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|