பதிவு செய்த நாள்
02 மார்2016
10:25
மும்பை : மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகள் எழுச்சியுடன் காணப்படுகின்றன. நேற்று சென்செக்ஸ் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 777 புள்ளிகள் உயர்வு கண்ட நிலையில், இன்றும் அந்த உயர்வு தொடர்வதால் சென்செக்ஸ் 24 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 7350 புள்ளிகளையும் தாண்டி வர்த்தகமாகின.
இன்றைய வர்த்தகத்தில்(காலை 1015மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 431.27 புள்ளிகள் உயர்ந்து 24,210.62-ஆகவும், நிப்டி 135 புள்ளிகள் உயர்ந்து 7357-ஆகவும் இருந்தன.
ரூபாயின் மதிப்பு உயர்ந்தது, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|