பதிவு செய்த நாள்
09 மார்2016
07:08
புதுடில்லி : ஸ்டார் இந்தியா, ‘புரோ கபடி லீக்’ போட்டிகளின் எண்ணிக்கையை, அதிகரிக்க முடிவு செய்துள்ளது. கடந்த, 2014 ஜூலை மாதம், ஸ்டார் இந்தியா நிறுவனம், ‘புரோ கபடி லீக்’ என்ற பெயரில், கபடி போட்டிகளைத் துவக்கியது. இந்த போட்டிகளுக்கு, ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது, ஒரு தொடர், 30 தினங்களுக்கு நடக்கிறது. இதை, நடப்பாண்டில், 80 தினங்கள் நடத்த, ஸ்டார் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலகின் தலைசிறந்த, 12 நாடுகள் பங்கேற்கும் வகையிலான, உலக கோப்பை போட்டியை நடத்த, சர்வதேச கபடி சம்மேளத்துடன், ஸ்டார் இந்தியா நிறுவனம், பேச்சு நடத்தி வருகிறது. இதுகுறித்து, ஸ்டார் இந்தியாவை சேர்ந்த சஞ்சய் குப்தா கூறுகையில், ‘‘தற்போது, கிரிக்கெட்டிற்கு இணையாக, கபடி, கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் ஆகிய போட்டிகளுக்கும் முதலீடு செய்யப்படுகிறது,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|