பதிவு செய்த நாள்
09 மார்2016
07:10
புதுடில்லி : மத்திய அமைச்சரவை, 100 கனிம சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான ஒப்புதலை தெரிவித்திருக்கிறது. நாட்டில் உள்ள கனிம சுரங்கப் பணிகளை விரைவுப்படுத்தும் எண்ணத்தில் இந்த, 100 கனிம சுரங்கங்களை ஏலம் விட, மத்திய அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.இதையடுத்து, ‘கனிம சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான வேலைகள் அடுத்த வாரமே துவங்கும்’ என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஏலத்துக்கான அனைத்து வேலைகளையும் மேற்கொள்வதற்காக எஸ்.பி.ஐ., கேபிடல் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இணையதளம் மூலமாக ஏலம் நடத்த, தேவையான இணையதள வசதியை அளிக்கும். சுரங்கப் பணிகளை விரைவுப்படுத்தவும் தனியார் துறையினரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், இந்த ஏலம் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|