பதிவு செய்த நாள்
09 மார்2016
07:14
புதுடில்லி : போர்டு இந்தியா நிறுவனம், கடந்த பிப்., மாதம், 11 ஆயிரத்து, 823 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. உள்நாட்டில், கார்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில், போர்டு இந்தியா நிறுவனம், ஏழாவது பெரிய நிறுவனமாக உள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு, கார்களை ஏற்றுமதி செய்வதில், ஹூண்டாய், மாருதி ஆகியவை முன்னணியில் உள்ளன. இந்நிலையில், போர்டு இந்தியா நிறுவனம், கடந்த பிப்., மாதம், 50 நாடுகளுக்கு, 11 ஆயிரத்து, 823 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. அதேசமயம், மாருதி நிறுவனம், 9,336 கார்கள்; ஹூண்டாய், 9,013 கார்களை மட்டும் ஏற்றுமதி செய்து உள்ளன. நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல் பிப்., வரையிலான காலத்தில், ஹூண்டாய் நிறுவனம், 1.51 லட்சம்; மாருதி, 1.13 லட்சம்; போர்டு, 97 ஆயிரத்து, 202 கார்களை ஏற்றுமதி செய்துள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|