பதிவு செய்த நாள்
10 மார்2016
07:36
புதுடில்லி : இந்தியாவில், புதிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலங்களின் பட்டியலில், முதல் மூன்று இடங்களை, குஜராத், டில்லி, தமிழகம் ஆகியவை பெற்றுள்ளன.
புதுடில்லியைச் சேர்ந்த, தேசிய பொருளாதார ஆய்வு நிறுவனமான, என்.சி.ஏ.இ.ஆர்., முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலங்கள் பற்றிய, ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 20 மாநிலங்கள் மற்றும் டில்லி யூனியன் பிரதேசத்தில் உள்ள தொழிலாளர் வளம், அடிப்படை கட்டமைப்பு வசதி, பொருளாதார சூழல், அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் நிர்வாகம், வர்த்தகம் புரிவதற்கான சாதகமான அம்சங்கள் ஆகிய, ஐந்து காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்: திறமை வாய்ந்த தொழிலாளர்களைப் பொறுத்தவரை, கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகியவை, முதல் மூன்று இடங்களில் உள்ளன. சுலபமாக தொழில் துவங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளில், டில்லி முதலிடத்திலும், பஞ்சாப், குஜராத் மாநிலங்கள், அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. அதேபோல, பொருளாதார வளத்தி லும், டில்லி முதலிடத்தைப் பிடித்து உள்ளது. அதை தொடர்ந்து, ஆந்திரா, மஹாராஷ்டிரா ஆகியவை உள்ளன. சிறந்த நிர்வாகம், அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றில், குஜராத், தமிழகம், மத்திய பிரதேசம் ஆகியவை, முதல் மூன்று இடங்களை பிடித்து உள்ளன.சிறப்பாக வர்த்தகம் புரிவதற்கான சூழல் உள்ள மாநிலங்களில், மீண்டும் குஜராத் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடங்களில், ராஜஸ்தான்,சத்தீஸ்கர் ஆகியவை உள்ளன.
இந்தியாவில், சுலபமான வர்த்தகத்திற்கு தடையாக உள்ள, 22 அம்சங்களில், ஊழல் முதலிடத்தில் உள்ளது. அடுத்து, வர்த்தகத்தை துவக்குவதற்கான உரிமம் பெறுவது, சுற்றுச்சூழல் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஆகியவை உள்ளன.ஊழலில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக, ஆய்வில் பங்கேற்ற அனைத்து நிறுவனங்களும் தெரிவித்து உள்ளன. உத்தரகண்ட் மாநிலத்தில் ஊழல் மிகக் குறைவாக உள்ளதாக, 32.5 சதவீத நிறுவனங்கள் கூறியுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|