பதிவு செய்த நாள்
11 மார்2016
00:07
புதுடில்லி : பொது துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., நிறுவனம், அதன், ‘பிராட்பேண்ட்’ வாடிக்கையாளர்களுக்கு, விருப்பமான திரைப்படங்கள், தொடர்கள் ஆகியவற்றை பார்க்கும் வசதியை வழங்குவதாக அறிவித்து உள்ளது. இதற்காக, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், ‘டி.டி.எச்.,’ நிறுவனமான, டாடா ஸ்கை உடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.‘புதிய பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு, முதல் மாத கட்டணம் ரத்து செய்யப்படும்’ என, பி.எஸ்.என்.எல்., தெரிவித்துள்ளது.அத்துடன், டாடா ஸ்கை நிறுவனமும், 500 ரூபாய் மதிப்பிற்கு, விருப்பமான திரைப்படங்கள், தொடர்கள் உள்ளிட்டவற்றை பார்க்கும் வசதியை, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது.டாடா ஸ்கை நிறுவனம் வசம், 4,000க்கும் அதிகமான திரைப்படங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|