பதிவு செய்த நாள்
11 மார்2016
00:11
பனாஜி : ‘உள்ளூர் மக்களுக்கு, பல வகையிலும் வருவாய் அளிக்கக் கூடிய, ‘ஹெலிகாப்டர் சுற்றுலா’ குறித்த புரளிகளை நம்ப வேண்டாம்’ என, கோவா சுற்றுலா வளர்ச்சி கழகம் தெரிவித்து உள்ளது.
கோவாவின் வடக்கே, சிங்குரிம் கடற்கரை கிராமத்தில், கடந்த ஜனவரி யில், ஹெலிகாப்டர் சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டது. கோவாவின் கடலோரப் பகுதிகளையும், இயற்கை காட்சிகளையும் கண்டு களிக்கும் இந்த சாகச பயணத்திற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஹெலிகாப்டர் கிளப்பும் புழுதி யும், இரைச்சலும் கிராம மக்களின் அமைதியைக் கெடுப்பதாக, அவை குற்றம்சாட்டின. இதனால், கோவா அரசு, ஒரே நாளுடன் ஹெலிகாப்டர் சுற்றுலாவை நிறுத்திக் கொண்டது.இதையடுத்து, கோவாவின் தெற்கே, கன்சாலிம் கிராமத்தில், கடந்த பிப்ரவரி யில், காதலர் தினத்தன்று, மீண்டும் ஹெலிகாப்டர் சுற்றுலா துவக்கப்பட்டது. ஐந்து நட்சத்திர ஓட்டலில், ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து சுற்றுலாவுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த சுற்றுலாவுக்கும், பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சட்டத்திற்குப் புறம்பாக, சுற்றுலாவை நடத்துவதாக அவை குற்றம்சாட்டியுள்ளன.
இதற்கு மறுப்பு தெரிவித்து, கோவா சுற்றுலா வளர்ச்சி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:சாகச சுற்றுலாவுக்கு வரவேற்பு பெருகி வருகிறது. இந்த வகையில், உள்ளூர் மக்களுக்கு, ‘ஹெலிகாப்டர் சுற்றுலா’ வரப்பிரசாதமாக விளங்கும். இதில் சட்ட மீறல் எதுவும் இல்லை. இந்த சுற்றுலாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வசதி படைத்தவர்கள் விரும்பும் இத்தகைய சுற்றுலா, சுற்றுப்புற கிராம மக்களின் வருவாய்க்கும், வேலைவாய்ப்புகளுக்கும் உதவும்.இத்துடன், ‘ஏர் பலுான் பயணம்’ உள்ளிட்ட மேலும் பல சாகச நிகழ்ச்சி கள் அறிமுகமாக உள்ளதால், அப்பகுதி மக்களின் பொருளாதாரம் செழிக்கும். ஆகவே, ஹெலிகாப்டர் சுற்றுலா போன்ற சாகச பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை எதிர்க்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|