பதிவு செய்த நாள்
14 மார்2016
23:24
லண்டன் : இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான, கிங்ஸ் காலேஜ் மருத்துவமனை, ஆந்திராவின் புதிய தலைநகரமான, அமராவதியில், 1,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை ஒன்றை, உலகத்தரத்துடன் அமைக்க இருப்பதாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு, லண்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேலும் கூறுகையில், ‘‘கிங்க்ஸ் காலேஜ் மருத்துவமனை, புதிதாக அமையவிருக்கும் தலைநகரான அமராவதியில், மிக விரைவில், 1,000 படுக்கை வசதி கொண்ட உலகத் தரமிக்க மருத்துவமனையை துவக்க உள்ளது. மேலும், இந்தியா முழுக்க, 11 மருத்துவமனைகளை துவக்க உள்ளது.‘‘மருத்துவமனையை மட்டுமின்றி, இந்தியாவில் மெடிக்கல் டூரிஸத்தையும், அவர்கள் மேம்படுத்தும் முயற்சியிலும் இறங்கவிருக்கின்றனர். மேலும், இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும் தயாரிக்க இருக்கின்றனர். அமராவதியில், இந்த புதிய மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டும் விழா, வரும் ஜூன் முதல் வாரத்தில் இருக்கும்,” என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|