பதிவு செய்த நாள்
19 மார்2016
04:58
திருவனந்தபுரம்:கேரள கூட்டுறவு பால் சந்தைப்படுத்தும் கூட்டமைப்பான, எம்.ஐ.எல்.எம்.ஏ., ஊட்டச்சத்துள்ள, ‘ஆர்கானிக் பால்’ உற்பத்தியில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
‘இத்தகைய பால் உற்பத்திக்கு, நெதர்லந்து அரசின் சோலிடாரிடாட் நிறுவனம், அனைத்து வகையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், விரைவில் கையெழுத்தாக உள்ளது,’’ என, எம்.ஐ.எல்.எம்.ஏ., நிர்வாக இயக்குனர் கே.டி.தாமஸ் தெரிவித்து உள்ளார்.
ஆர்கானிக் பால் என்பது, முழுக்க முழுக்க, இயற்கை உணவுகளை உண்ணும் மாடுகளில் இருந்து பெறப்படுவது. இதற்காக, கேரளாவின் வயநாடு மாவட்டத்தில், முல்லன்கொல்லி பகுதி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இந்த முறையில், ஒன்றரை ஆண்டுகள் மாடுகள் வளர்க்கப்பட்ட பின்னரே, அதிலிருந்து பால் கறக்கப்படும். அதேசமயம், தற்போதுள்ள பால் விலையை விட, இயற்கை பால் விலை, அதிகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|