பதிவு செய்த நாள்
20 மார்2016
07:10
பீஜிங் : சீன அரசு, பொருளாதார மந்த நிலையில் இருந்து மீள்வதற்காக, சேவை துறைகளில், அன்னிய நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து, சீன வர்த்தக அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஷென் டன்யங் கூறியதாவது: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அதிக அளவில் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இந்தாண்டு, ஆறு அம்ச கொள்கை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம், கல்வி, நிதி, கலாசாரம் போன்ற சேவைத் துறைகளில், அன்னிய நேரடி முதலீடுகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அது தொடர்பான நிர்வாக நடைமுறைகள் முடுக்கி விடப்படும். சீனாவின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது, மத்திய மற்றும் மேற்கு பிராந்தியங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன. அப்பகுதிகளில், அன்னிய நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆண்டு, சீனாவின் பொருளாதார வளர்ச்சி, 6.9 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இருந்தபோதிலும், அன்னிய நேரடி முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சீனாவின் சேவை துறை, அதிக அளவில் அன்னிய முதலீடுகளை ஈர்த்து வருகிறது. கடந்த ஆண்டு, சீனாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடுகளில், சேவைத் துறை, 61.1 சதவீதத்தை ஈர்த்துள்ளது. இந்தாண்டு, கடந்த இரண்டு மாதங்களில், உயர் தொழில்நுட்ப சேவை துறையில், அன்னிய நேரடி முதலீடு, 157 சதவீதம் அதிகரித்துள்ளது. அன்னிய நேரடி முதலீட்டிற்கான கட்டுப்பாடுகளை, சீனா மேலும் தளர்த்த உள்ளதால், அந்நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து மீளும் என, எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|