பதிவு செய்த நாள்
20 மார்2016
23:46
சான்பிரான்சிஸ்கோ : சமூக வலைதளமான, ‘டுவிட்டரில்’ ஒரு செய்திக்கு அதிகபட்சமாக, 140 எழுத்துக்கள் தான் அனுப்பலாம். கூடுதல் தகவல்களை, இரண்டாவது செய்தியாகத்தான் அனுப்ப முடியும். இந்நிலையில், எழுத்துக்களுக்கான வரம்பை, 140ல் இருந்து, 10 ஆயிரம் ஆக உயர்த்த, ‘டுவிட்டர்’ திட்டமிட்டுள்ளதாக, கடந்த ஜனவரியில் தகவல் வெளியானது.இந்நிலையில், அமெரிக்க, ‘டிவி’ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, ‘டுவிட்டர்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஜேக் டோர்சே, ‘140 எழுத்துக்கள் என்ற கட்டுப்பாடு அழகானது. அந்த அனுபவத்தை இழக்க விரும்பவில்லை’ என, கூறினார். எனவே, தற்போதைக்கு, ‘டுவிட்டரில்’ எழுத்துக்களுக்கான வரம்பு உயராது என, தெரிகிறது. அதேசமயம், 140 வார்த்தைகளை கொண்ட ஒரு செய்தியை, ‘கிளிக்’ செய்தால், மீதமுள்ள, 9 ஆயிரத்து, 860 எழுத்துக்களை படிக்கும் வசதியை வழங்க, ‘டுவிட்டர்’ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|