பதிவு செய்த நாள்
23 மார்2016
07:07
சண்டிகர் : காலணி மற்றும் ஆடைகள் துறையில் ஈடுபட்டு வரும் உட்லேண்ட் நிறுவனம், உடற்பயிற்சியின் போது பயன்படுத்தும் பொருட்களையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, உட்லேண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹர்கிரத் சிங் கூறியதாவது:தற்போது இளைய தலைமுறையினர், உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதனால், உடற்பயிற்சியின் போது அணியும், ‘பிட்னஸ் பேன்ட், வாட்ச், ஐவியர், கேம்பிங் லைட், டி – சர்ட்’ உள்ளிட்டவற்றையும் அறிமுகம் செய்ய உள்ளோம். இதற்காக, இத்தகைய பொருட்கள் தயாரிப்பில், பல ஆண்டுகளாக ஈடுபட்டு உள்ள நிறுவனங்களிடம் ஒத்துழைப்பு கேட்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். உட்லேண்ட் நிறுவனத்திற்கு, நாடு முழுவதும், 600 கடைகள் உள்ளன. நடப்பு நிதியாண்டில், இந்நிறுவனத்தின் விற்றுமுதல், 1,500 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|