பதிவு செய்த நாள்
23 மார்2016
07:08
புதுடில்லி : மத்திய அரசு, வங்கி சாரா நிதி துறையில் மேலும், 25 பிரிவுகளில், 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது, வணிக வங்கி, நிதி ஆலோசனை, பங்கு வர்த்தகம் உள்ளிட்ட, 18 பிரிவுகளில், அன்னிய நிறுவனங்கள், மத்திய அரசின் ஒப்புதலின்றி, 100 சதவீதம் முதலீடு மேற்கொள்ள, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இத்துடன், கமாடிட்டி வர்த்தகம், அடிப்படை கட்டமைப்பு நிதியம் உட்பட, மேலும், 25 பிரிவுகளில், அன்னிய நிறுவனங்களின், 100 சதவீத முதலீடுகளுக்கு அனுமதி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதன் மூலம், அன்னிய நிறுவனங்கள், மத்திய அரசின் ஒப்புதலின்றி, இந்தியாவில் முதலீடு மேற்கொள்ளலாம். இத்தகைய சுலபமான வர்த்தக நடைமுறை, அதிக அளவில் அன்னிய முதலீடுகளை ஈர்க்க துணை புரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|