பதிவு செய்த நாள்
25 மார்2016
07:51
பனாஜி : கோவா மாநில சுகாதாரத்துறை அமைச்சகமான ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஆகியவை இணைந்து, கோவாவில் ’ஆரோக்யா’ எனும் மருத்துவக் கண்காட்சியை நடத்துகின்றன. இக் கண்காட்சி மார்ச் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது.தேசிய அளவில் நடத்தப்படும் இக்கண்காட்சி, இம்முறை, இந்திய மருத்துவ முறைகள் குறித்து நடத்தப்பட இருக்கிறது. இந்திய மருத்துவ முறைகளை மக்களிடையே பிரபலப்படுத்துவதை கண்காட்சியின் நோக்கமாக வைத்திருக்கிறார்கள்.இலவச மருத்துவ சோதனை, மருந்துகள் வழங்குவது, பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என, பல அம்சங்களுடன் கண்காட்சி நடைபெற இருக்கிறது.இதுபோன்ற முயற்சிகளால், பாரம்பரிய மருந்துகள் தயாரிக்கும் சிறு சிறு நிறுவனங்களுக்கு, சிறப்பான வாய்ப்புகள் உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான நல்ல ஆரம்பமாக இதைக் கருதுகிறது கோவா அரசு.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|