பதிவு செய்த நாள்
25 மார்2016
07:55
புதுடில்லி : ‘வேலை தேடும் மனோபாவம், நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது’ என, மேன்பவர் குருப் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விவரம்: சந்தையில் நிலவும் வேலைவாய்ப்பை பொறுத்தே, ஒருவர், தனக்குரிய வேலை குறித்து தீர்மானிக்கிறார். அதுபோல, ஒரு நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாறுவோரும், சந்தை நிலவரத்தை பொறுத்தே முடிவெடுக்கின்றனர். அதேசமயம், ஒருவர், தன் வயதைப் பொறுத்தே, வேலை தேடுவது குறித்தும், எந்த வேலைக்கு செல்லலாம் என்பது பற்றியும் தீர்மானிக்கிறார். இந்த இரு பிரிவினருக்கும், அடிப்படையில், பணமே பிரதானமாக உள்ள போதிலும், தற்கால சூழலில், தங்கள் வாழ்க்கை முறையோடு ஒத்துப்போகும் வேலையை தேர்வு செய்யவே, பெரும்பான்மையினர் விரும்புகின்றனர்.ஓய்வு காலத்தில் பணம் வேண்டுமே என்பதற்காக மட்டும் வேலை தேடுவது குறைந்து வருகிறது. வேலை தேடுவோரின் மனோபாவம், நாட்டிற்கு நாடு மாறுபடுகிறது.
சீனாவில், புகழ் பெற்ற நிறுவனங்களுக்கு மாறவே அதிகமானோர் விரும்புகின்றனர். வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோவில், தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஆர்வம் குறைவாக உள்ளது. இந்த இரு நாடுகளிலும், வேலைவாய்ப்பு குறித்த ஆய்வுக்கு, சமூக வலைதளங்களை பயன்படுத்துவது, வளர்ந்த நாடுகளை விட அதிகமாக உள்ளது. திறமை உள்ளோர், பாரம்பரியமான, சிக்கலான பணி நியமன நடைமுறைகளை தவிர்த்து, தங்கள் வாழ்க்கை பாணிக்கு ஏற்ற வேலைகளை தேர்வு செய்கின்றனர். அதற்கேற்ப, நிறுவனங்களும், பணி நியமனம் மற்றும் பணியாளர் நிர்வாக நடைமுறைகளில் மாற்றத்தை புகுத்தி வருகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|