பதிவு செய்த நாள்
26 மார்2016
05:25
மும்பை: இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களில், ஐந்தாவது இடத்தில் உள்ள டெக் மகிந்திரா, பிரான்சில், மேம்பாட்டு மையத்தை திறந்துள்ளது. இதுகுறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சி.பி.குர்னானி வெளியிட்டுள்ள அறிக்கை:டெக் மகிந்திரா நிறுவனம், பிரான்சில் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்தி உள்ளது. புகழ் பெற்ற ஏர்பஸ் நிறுவனம் அமைந்துள்ள தொலவுஸ் நகரில், புதிய, விரிவுபடுத்தப்பட்ட மேம்பாட்டு மையம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில், வாடிக்கையாளர்களுக்கு தேவையான, விமான துறை சார்ந்த, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் வடிவமைப்பிற்கான, ‘சாப்ட்வேர்’ தீர்வுகள் வழங்கப்படும். இதற்காக, பணியாளர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படும். புதிய மையத்தில் கூடுதல் பணியாளர்கள்நியமிக்கப்படுவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|