பதிவு செய்த நாள்
28 மார்2016
07:09
வங்கி கிளைக்கு போகாமலே பணம் எடுக்க, ஏ.டி.எம்., கார்டு உதவுகிறது. நினைத்த நேரத்தில் பணம் எடுத்துக் கொள்ளவும் கைகொடுக்கிறது. ஆனால், ஏ.டி.எம்., கார்டை அதிகஅளவில் பயன்படுத்தும் போது சேவை கட்டணமும் அதிகமாகலாம். இதற்காக வங்கிகளை நொந்து கொள்வதை விட, ஏ.டி.எம்., பயன்பாட்டை மாற்றிக் கொண்டால் கட்டணத்தை குறைக்கலாம்.
அஞ்சல் ஏ.டி.எம்.,கள்அஞ்சல் துறை, ஏ.டி.எம்., வசதி வழங்கி வருகிறது. பேமென்ட் வங்கி உரிமமும் பெற்றிருக்கும் அஞ்சல் துறை, தன் ஏ.டி.எம்., கார்டு வசதியை மற்ற வங்கி சேவைகளிலும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரியுள்ளது. இது வழங்கப்பட்டால், அஞ்சல் ஏ.டி.எம்.,களை நாடு முழுவதும் பயன்படுத்தலாம். நீங்களும் அஞ்சல் சேமிப்பு கணக்கு மூலம் ஏ.டி.எம்., கார்டு பெற்றுக் கொண்டு அதன் விரிவான வலைப்பின்னலை பயன்படுத்துவதால், வேறு வங்கி ஏ.டி.எம்.,களை நாடும் தேவை இருக்காது. இதன் மூலம் மற்ற வங்கி ஏ.டி.எம்.,களை நாடுவதற்கான கட்டணத்தை தவிர்க்கலாம்.
டிஜிட்டல் வழி‘இ – காமர்ஸ்’ மூலம் பொருட்கள் வாங்க அல்லது பணப் பரிமாற்றத்திற்காக, ஏ.டி.எம்., வசதியை பயன்படுத்துவதாக இருந்தால் அதற்கு பதிலாக, ‘ஸ்மார்ட்போன்’ மூலம் செயல்படும், ‘டிஜிட்டல் வாலெட்’ வசதியை பயன்படுத்தலாம். பில் செலுத்த, ‘கால் டாக்சி’ அழைக்க, ‘டிக்கெட்’ முன்பதிவு செய்ய, டிஜிட்டல் வாலெட் வசதியை நாடலாம்.
முன்னுரிமை வசதிஒரு சில வங்கிகளில் முன்னுரிமை வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம்., பயன்பாட்டில் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இந்த வசதியை உங்களால் பெற முடியும் என்றால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயன்பாட்டில் மாற்றம்அடிக்கடி ஏ.டி.எம்., பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். வாரம் இருமுறை தனித்தனியே, 5,000 ரூபாய் எடுப்பதற்கு பதில், 10 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொள்ளுங்கள்.
கிரெடிட் கார்டுரொக்கம் செலுத்த வேண்டிய இடங்களில், ‘கிரெடிட் கார்டை’ பயன்படுத்துங்கள் (கவனமாக). இதன் மூலம் ஏ.டி.எம்., பயன்பாட்டை குறைக்கலாம். நவீன வாழ்க்கையில் வசதிகளும், செலவுகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், கொஞ்சம் கவனமாக இருப்பதன் மூலம் கட்டணங்களில் சிறியளவை குறைக்க முடிந்தால் கூட, நீண்டகால நோக்கில் நல்ல பலன் அளிக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|