பதிவு செய்த நாள்
28 மார்2016
07:23
புதுடில்லி : ‘‘முன்பணம் இல்லாமல், ‘எலக்ட்ரிக் கார்’களை தவணை முறையில் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது,’’ என, மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்தினால் பாதிப்பு இருக்காது. 2030க்குள், நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களாக மாறுவதற்கு, ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி முன்பணம் இல்லாமல், தவணை முறையில் எலக்ட்ரிக் கார் வழங்கப்படும். பொதுமக்கள், எரிபொருளுக்கு செலவு செய்யும் பணத்தை மிச்சப்படுத்தி, தவணையை செலுத்த முடியும். இதன் மூலம் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டில், உலக நாடுகளுக்கு இந்தியா முன் மாதிரியாக திகழும். இதற்காக விரைவில் கூட்டம் நடத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|