பதிவு செய்த நாள்
28 மார்2016
07:29
புதுடில்லி : இந்தியாவில், விமான பயணிகளுக்கான இழப்பீட்டு தொகை உயர்த்தப்பட்டது. கால தாமதம், உடைமைகள் தொலைதல், உடல்நலக் குறைவு, காயம் என, பல வகைகளில் விமானப் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்புகளுக்கான இழப்பீட்டு தொகை, வளர்ந்த நாடுகளில் அதிகளவில் வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இழப்பீட்டு தொகை குறைவாக உள்ளது.இதையடுத்து, விமானப் பயணிகளுக்கான இழப்பீட்டு தொகை யை உயர்த்த, விமான பயணிகளுக்கான சட்டத்திருத்த மசோதாவில் திருத்தம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, இதற்கான சட்டத்திருத்த மசோதா, 2015 டிசம்பர் மாதம், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2ம் தேதி, ராஜ்யசபாவில் நிறைவேறியது.இதையடுத்து, விமான பயணிகளுக்கான இழப்பீட்டு தொகை, ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|