பதிவு செய்த நாள்
01 ஏப்2016
07:37
புதுடில்லி : ஐரோப்பாவில், பெரிய மருத்துவ நிறுவனமாக திகழும் மெடிகவர், இந்தியாவில், 660 கோடி ரூபாய் செலவில், 50 கருத்தரிப்பு மையங்களை துவக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மெடிகவர் நிறுவன தலைமை அதிகாரி ஜான் ஸ்டப்பிங்டன் கூறியதாவது:கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், போலந்து நாட்டில், மெடிகவர் நிறுவனம் துவங்கப்பட்டது. தற்போது, நிறுவனத்திற்கு இங்கிலாந்து, போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளில், கிளைகள் உள்ளன. இந்தியாவில், மூன்று கோடி மக்கள் கருத்தரிப்பு பிரச்னையை சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க, 660 கோடி ரூபாய் செலவில், 50 கருத்தரிப்பு மையங்கள் துவக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், அடுத்து பஞ்சாப், ஹரியானா உட்பட, நாடு முழுவதும் கருத்தரிப்பு மையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|