பதிவு செய்த நாள்
01 ஏப்2016
07:39
ஐதராபாத் : ‘அமேசான்’ நிறுவனம், ஐதராபாத்தில் தனக்கான பெரிய வளாகம் ஒன்றை அமைக்கும் பணியைத் துவக்கி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனம், இணையதள வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு, உலகில் பல நாடுகளில் அலுவலகங்கள் இருந்தாலும், அமெரிக்காவில் தான் பெரிய வளாகம் உள்ளது. தற்போது அமெரிக்காவிற்கு வெளியே, முதன் முறையாக, 10 ஏக்கர் பரப்பளவில் பெரிய வளாகத்தை ஐதராபாத்தில் உள்ள, கச்சிபோவ்லி என்ற இடத்தில் அமைக்கிறது. இதன் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராமாராவ், ‘‘அமேசான் நிறுவன முதலீட்டால், பலருக்கு வேலை கிடைக்கும். உள்ளூர் பொருளாதாரம் மேம்படும்,’’ என்றார். அமேசான் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்தியா எங்களுக்கு முக்கிய சந்தையாக இருக்கிறது. அதனால் இங்கே நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்வோம்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|