பதிவு செய்த நாள்
03 ஏப்2016
06:53
புதுடில்லி:இந்தியாவின் மிகப் பெரிய மின்னணு வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், பெங்களூரைச் சேர்ந்த, ‘போன்பி’ எனும், மொபைல் வாலட் நிறுவனத்தை கையகப்படுத்தி இருக்கிறது.‘ஆன்லைன’ வர்த்தகத்தின்போது, பணம் செலுத்துவது என்பது, பல தடைகளைக் கொண்டதாக இருக்கிறது. அதை எளிதாக்கும் வகையிலான நவீன தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் நிறுவனம் போன்பி. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பணம் செலுத்தும்போது, வாடிக்கையாளர்கள் தங்களுக்கான தனித்துவ அடையாளத்தையும் போன் நம்பரையும் மட்டுமே பயன்படுத்தினால் போதுமானது. வேறு வங்கி சம்பந்தப்பட்ட எந்த தகவல்களையும் தெரிவிக்க தேவையிருக்காது.இதுகுறித்து, பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பின்னி பன்சால், ‘‘பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய சமீர் மற்றும் ராகுல் ஆகியோர் போன்பி நிறுவனத்தை உருவாக்கி இருக்கின்றனர். பிளிப்கார்ட் கையகப்படுத்தினாலும், போன்பி தனி அங்கமாகவே செயல்படும்,’’ என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|