பதிவு செய்த நாள்
03 ஏப்2016
06:54
காந்திநகர்:அமுல் நிறுவனம், கடந்த, 2014 – 15ம் நிதியாண்டில், தன் விற்றுமுதல், 11 சதவீத வளர்ச்சி அடைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் அமைப்பு, அமுல் எனும் பிராண்டில் பால் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், 2014 – 15ம் நிதியாண்டில், 11 சதவீத வளர்ச்சியை விற்றுமுதலில் பெற்றிருக்கிறது. அதற்கு முந்தைய நிதியாண்டில், 20 ஆயிரத்து, 733 கோடி ரூபாய் என்றிருந்த நிலையிலிருந்து, இந்த நிதியாண்டில், 23 ஆயிரத்து, 005 கோடி ரூபாய் என்ற அளவுக்கு, விற்றுமுதலை அதிகரித்திருக்கிறது.இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சோதி கூறியதாவது:அமுல் நிறுவனத்தைச் சார்ந்த, அதே சமயம் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் அமைப்பில் இல்லாத அமைப்புகளின் விற்றுமுதலையும் சேர்த்தால் சுமார், 33 ஆயிரம் கோடி ரூபாய் அதாவது, 14 சதவீத வளர்ச்சியை கடந்த நிதியாண்டில் எட்டியிருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|