பதிவு செய்த நாள்
16 ஏப்2016
07:30
டோக்கியோ : ஜப்பானில், தென்மேற்கில் உள்ள கியுஷு தீவில், நேற்று முன்தினம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அவற்றை சீர்படுத்தும் நடவடிக்கைகள், அடுத்தடுத்து உண்டாகும் நில அதிர்வுகளால் தாமதப்பட்டு உள்ளது. இதனால், உருக்கு, வாகனம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், அவற்றின் உற்பத்தியை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. சோனி, டொயோட்டா, ஹோண்டா, பியூஜி பிலிம், மிட்சுபிஷி எலக்ட்ரிக், ரெனசாஸ், பிரிட்ஜ்ஸ்டோன், உள்ளிட்ட நிறுவனங்களின் தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. இந்த தகவல் வெளியானதை அடுத்து, ஜப்பான் பங்குச்சந்தையில், சோனி, டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவடைந்தது. முன்னணி நிறுவனங்களின் உற்பத்தி நிறுத்தம், ஜப்பான் பொருளாதாரத்தை பாதிக்கும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|