பதிவு செய்த நாள்
20 ஏப்2016
23:30
விசாகப்பட்டினம் : ‘‘வசதி இருந்தும், வங்கி கடனை செலுத்தாதோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்ட நடைமுறைகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்,’’ என, விஜயா வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல்பாட்டு அதிகாரியுமான, கிஷோர் சன்சி தெரிவித்துள்ளார். அவர், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில், விஜயா வங்கியின் புதிய கிளையை திறந்து வைத்து மேலும் பேசியதாவது: மிகப் பழமையான, சிக்கலான நம் சட்டங்கள், தற்காலத்திற்கு ஏற்றவாறு இல்லை. அவற்றை உடனடியாக சீர்படுத்தினால் மட்டுமே, வசதி இருந்தும் வங்கி கடனை செலுத்தாமல் இருப்போரை கட்டுப்படுத்த முடியும். கடன் வசூலிப்பு தீர்ப்பாயங்கள், சிறப்பாக பணியாற்றுகின்றன; ஆனால், பல அம்சங்களில், அவை அதிகாரத்துடன் செயல்பட முடியாமல், பிரச்னையை சந்திக்கும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|