பதிவு செய்த நாள்
26 ஏப்2016
01:31
மும்பை : முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம், 10 ஆண்டுகளுக்கு முன், 5,000 பெட்ரோல் நிலையங்கள் அமைக்கும் உரிமையை பெற்றது; அதில், 5,000 கோடி ரூபாய் முதலீட்டில், 1,433 பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடு கிடுவென உயர்ந்தது. அத்துடன், உள்நாட்டில் மானிய விலையில் பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்ட பொது துறை நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல், ரிலையன்ஸ் திணறியது. இதனால் ஏற்பட்ட பெரும் இழப்பை தவிர்க்க, 2008, மே மாதம், அனைத்து பெட்ரோல் நிலையங்களையும் ரிலையன்ஸ் மூடியது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு தளர்த்தியது. சர்வதேச சந்தையிலும், கச்சா எண்ணெய் விலை குறைந்தது. இதையடுத்து, ரிலையன்ஸ், 2014ல், மீண்டும் பெட்ரோல் நிலையங்களை திறக்கத் துவங்கியது.
கடந்த, மார்ச் நிலவரப்படி, 950 பெட்ரோல் விற்பனை நிலையங்களை ரிலையன்ஸ் திறந்துள்ளது. ‘‘இந்தாண்டு, மேலும், 200 பெட்ரோல் நிலையங்களை திறக்க திட்டமிட்டுள்ளோம்,’’ என, ரிலையன்ஸ் குழுமத்தின் துணை தலைமை நிதி அதிகாரி வி.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். கடந்த, 15 ஆண்டுகளில், 2015ல் தான் மிக அதிகமாக, பெட்ரோலுக்கான தேவை இருந்தது. அதனால் அந்தாண்டில், ரிலையன்ஸ், 30 லட்சம் கிலோ லிட்டருக்கும் அதிகமாக பெட்ரோல் விற்பனை செய்தது என, ஸ்ரீகாந்த் மேலும் கூறினார்.
தேவை பெருகும்உலகளவில், வரும், 2040ல், இந்தியாவில் தான் கச்சா எண்ணெயின் தேவை அதிகமாக இருக்கும். அப்போது, தினமும், ஒரு கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் தேவைப்படும்– சர்வதேச எரிசக்தி அமைப்பு
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|