பதிவு செய்த நாள்
27 ஏப்2016
23:38
புதுடில்லி : ‘‘நஷ்டத்தில் இயங்கி மூடப்பட்ட மூன்று யூரியா ஆலைகள் மீண்டும் திறக்கப்படும்,’’ என, மத்திய உரம் மற்றும் ரசாயன துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு, உ.பி., மாநிலம், கோரக்பூர்; ஜார்க்கண்டில், சிந்திரி; பீஹாரில், பாராயுனி ஆகிய இடங்களில், யூரியா உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இவை, நஷ்டத்தில் இயங்கியதால், அந்த ஆலைகள் மூடப்பட்டன. ஆலைகளை, தனியார் மூலம் மீண்டும் திறக்க, ‘டெண்டர்’ கோரப்பட்டது. ஆனால், டெண்டரில் பங்கேற்க, தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. இதுகுறித்து, அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் கூறுகையில், ‘‘லாபம் ஈட்டும் பொதுத்துறை ஆலைகளுடன், அரசு கூட்டு சேர்ந்து, மூடப்பட்ட மூன்று யூரியா ஆலைகளையும் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. உர துறை அமைச்சக ஒப்புதல் கிடைத்ததும், அந்த பணி துவங்கும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|