பதிவு செய்த நாள்
13 மே2016
07:17
புதுடில்லி:‘பெப்பிள்’ நிறுவனம், ஒரு லட்சம் ஸ்மார்ட் வாட்சுகளை, இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறது. இந்தியாவில், ‘ஸ்மார்ட் வாட்ச்’ விற்பனையில், ‘ஆப்பிள், ஹுவேய்’ போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. பெப்பிள் நிறுவனம், தற்போது, ‘அமேசான்’ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இணையதளம் மூலம், நவீன கை கடிகாரங்களை விற்பனை செய்ய உள்ளது. விலை, 5,999 ரூபாய் முதல், 15,999 ரூபாய் வரை உள்ளது.
இதுகுறித்து, பெப்பிள் நிறுவனர் எரிக் மிகிகோவ்ஸ்கி கூறியதாவது:எங்கள் ஸ்மார்ட் வாட்சுகளை, வேறு பல வழிகளில் இந்தியாவில் ஏற்கனவே, 20 ஆயிரம் பேர்கள் வாங்கியிருப்பதாக கருதுகிறோம். தற்போது அதிகாரபூர்வமாக அமேசானுடன் வருகிறோம். இந்தியா, தொழில்நுட்ப சாதனங்களுக்கான நல்ல சந்தை. அடுத்த ஆண்டுக்குள் ஒரு லட்சம் ஸ்மார்ட் வாட்சுகளை விற்பனை செய்ய முடியும் என, எண்ணுகிறோம். இவ்வாறு அவர் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|