பதிவு செய்த நாள்
13 மே2016
07:18
லண்டன்:பிரிட்டன் தலைநகர் லண்டனில், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பேசியதாவது:என்னிடம் அடிக்கடி பலர், ‘எந்த தொழிலை ஊக்குவிக்க வேண்டும்’ என, கேட்பதுண்டு. அதற்கு, ‘எந்த தொழில், சலுகைகளால் ஊக்குவிக்கப்படுகிறதோ, அது, அந்த தொழிலை கொல்வதற்கு சமம்’ என, பதில் கூறுவேன். ஒரு தொழில் சுறுசுறுப்பாக நடைபெறுவதற்கான கொள்கையை வகுப்பதுதான், நம் வேலையே தவிர, அத்தொழிலின் போக்கை தீர்மானிக்கும் பணியை, நாம் கையில் எடுக்கக் கூடாது.
இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க, ரூபாய் மதிப்பை குறைக்க வேண்டும் என, சிலர் கூறுகின்றனர்; தற்போதைக்கு, அது, சரியான தீர்வாக இருக்காது. இந்தியா உட்பட, வளரும் நாடுகள் பலவும், ஏற்றுமதி பொருட்களின் விலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி நன்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|