பதிவு செய்த நாள்
13 மே2016
07:18
லண்டன்:‘நிறுவனங்கள் நேர்மையாக ஊழியர்களை நடத்தும் விதத்தில் தான், அவர்களின் ஆரோக்கியம் அடங்கியுள்ளது’ என, பிரிட்டனைச் சேர்ந்த, கிழக்கு ஏஞ்சலியா பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துஉள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, சுவீடனில், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும், 5,800 பேரிடம், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், ஊதியம், வெகுமதி, ஊதிய உயர்வு, பொறுப்பை ஒப்படைப்பது உள்ளிட்ட பல அம்சங்களில், நிறுவனங்கள் நடந்து கொள்ளும் முறை தான், ஊழியர்களின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது என, கண்டறியப்பட்டுள்ளது.
சராசரிக்கும் அதிகமாக, ‘கவனிப்பு’ உள்ள நிறுவனங்களில், ஊழியர்களின் ஆரோக்கியம் மிகவும் நன்றாக உள்ளது. ‘நிறுவனங்கள், தங்களை நடத்துவது சரியில்லை’ என கருதும் ஊழியர்கள் ஆரோக்கிய பாதிப்பிற்கு ஆளாகின்றனர். அதேசமயம், தாங்கள் சிறப்பாக நடத்தப்படுவதாக கருதும் ஊழியர்கள், தங்களை மீறி, நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கின்றனர். அதனால், நிறுவனங்கள் ஆரோக்கியமாக வளர்கின்றன.
இந்த ஆய்வில், ‘ஒரு நிறுவனத்தின் நேர்மையான செயல்பாட்டிற்கான அளவுகோல் என்ன?’ என்பது தொடர்பாக, ஏழு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதில், ‘நிறுவனத்தின் முடிவால் பாதிக்கப்பட்டோரின் புகாரை காது கொடுத்து கேட்டறிதல், முடிவிற்கு எதிராக முறையீடு செய்ய வாய்ப்பளித்தல்’ உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.‘இந்த ஆய்வில், பணிச்சூழல் சிறப்பாக உள்ள நிறுவனங்களுக்கும், அதன் ஊழியர்களின் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது தெரியவந்தது’ என, ஆய்வாளர் கான்ஸ்டன்ஸி இப் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|