பதிவு செய்த நாள்
14 மே2016
07:57
சென்னை : பயன்படுத்தப்பட்ட பழைய பொருட்களை, பண்டமாற்று முறையில் இணையதளம் மூலம், விற்பனை செய்யும் சேவையை, ‘பார்ட்டர்கியா’ நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது. பழைய பொருட்களை இணையதளம் மூலம் விற்பனை செய்யும் துறை, விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த துறையின் சந்தை மதிப்பு, 56,200 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. பார்ட்டர்கியா நிறுவனம், பழைய பொருட்களை, பண்டமாற்று முறையில், விற்பனை செய்ய இணையதளத்தை உருவாக்கி உள்ளது. இந்த வசதி இலவசமாக இணையதளம் மற்றும் ஆப் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக, இந்த நிறுவனம், மூன்று கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அடுத்த, 12 – 18 மாதங்களில், 20 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை திரட்ட திட்டமிட்டு உள்ளது. இந்த சேவையின் மூலம் தங்களிடமிருக்கும் பொருளைக் கொடுத்து, வேண்டிய பொருளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|