பதிவு செய்த நாள்
19 மே2016
07:00
சிகாகோ : அமெரிக்காவின், சிகாகோ நகரைச் சேர்ந்த, ட்ரிப்யூன் பப்ளிஷிங் கம்பெனி, ‘லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ், சிகாகோ ட்ரிப்யூன்’ உள்ளிட்ட பத்திரிகைகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிறுவனம், அதன் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சில பணிகளை முடித்து தரும் பொறுப்பை, இந்தியாவின் டாடா கன்சல்டன்சி நிறுவனத்திடம் வழங்க உள்ளது. இந்த நடவடிக்கையால், ட்ரிப்யூன் பப்ளிஷிங் நிறுவனத்தைச் சேர்ந்த, 150 பேர் பாதிக்கப்படுவர்; அவர்களில் சிலரை, டி.சி.எஸ்., பணிக்கு அமர்த்தி கொள்ளும் என, தெரிகிறது.
அமெரிக்காவின் மெக்லட்சி குழுமம், ‘தி மியாமி ஹெரால்டு, தி சாக்ரமென்டோ பீ’ உள்ளிட்ட நாளிதழ்களை நடத்தி வருகிறது. சமீபத்தில், இந்நிறுவனமும், அதன் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை, இந்தியாவின் விப்ரோ நிறுவனத்திடம் அளித்து, பெற்றுக் கொள்ள உள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|