பதிவு செய்த நாள்
20 மே2016
07:20
புதுடில்லி : யாத்ரா டாட் காம், பல்வேறு வாடகை கார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. யாத்ரா டாட் காம் நிறுவனம், இணையதளம் மூலம், ஓட்டல்களை முன்பதிவு செய்துதரும் சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் இணையதளம் மூலம், இந்தியாவில், 55 ஆயிரம் ஓட்டல்கள் உட்பட, உலகம் முழுவதும், நான்கு லட்சம் ஓட்டல்களை முன்பதிவு செய்ய முடியும். இந்த நிலையில், யாத்ரா டாட் காம் நிறுவனம், வாடகை கார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. யாத்ராவின் ‘மொபைல் ஆப்’ மூலம், அனைத்து வகையான கார்கள் மற்றும் வேன்களை புக் செய்து கொள்ளலாம். மேலும் ஒரு வழி மட்டும் செல்வது, சுற்றிப்பார்த்துவிட்டு திரும்புவது என, விரும்பியவாறு வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவையை, யாத்ரா டாட் காம் நிறுவனம், நாடு முழுவதும், 450 நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|