பதிவு செய்த நாள்
20 மே2016
07:25
பெங்களூரு : உபர் நிறுவனம், பெங்களூரில், ‘பைக் டாக்சி’ எனும், வாடகை இருசக்கர வாகன சேவையை முற்றாக நிறுத்தி விட்டது. கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில், உபர், ஓலா போன்ற நிறுவனங்கள், ‘கால் டாக்சி’ சேவையில் ஈடுபட்டு வருகின்றன. கர்நாடக மாநிலம், பெங்களூரில், ஓலா, உபர் நிறுவனங்கள், மொபைல் ஆப் அடிப்படையிலான, பைக் டாக்சிகளை இயக்கி வந்தன. இந்நிலையில், கர்நாடக அரசு, பைக் டாக்சி சேவை சட்டத்திற்கு புறம்பானது என, அறிவித்தது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதத்தில், ஓலா நிறுவனம் பைக் டாக்சி சேவையை நிறுத்தி விட்டது. தற்போது, இந்த சேவையை, உபர் நிறுவனமும் முற்றாக நிறுத்திவிட்டதாக அறிவித்திருக்கிறது. விரைவில், நவீன விதிமுறைகளை உருவாக்குவதில் அரசுடன் இணைந்து பணியாற்றி, மீண்டும் சேவையை தொடர விரும்புவதாகவும், உபர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|